சனி, செப்டம்பர் 29, 2018

குறள் எண்: 1154 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 13 - கற்பியல்; அதிகாரம்: 116 - பிரிவு ஆற்றாமை; குறள் எண்: 1154}

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

விழியப்பன் விளக்கம்: "அச்சம் வேண்டாம்! உனைப் பிரியேன்!" என உறுதி அளித்தவர் பிரிந்தால்; அவரின் ஐயமற்ற வாக்கை நம்பியோர்க்கு, குற்றம் ஏதும் உண்டோ?
(அது போல்...)
"தயக்கம் வேண்டாம்! உமைக் காப்போம்!" என பிரச்சாரம் செய்தோர் கைவிட்டால்; அவர்களின் பகட்டான பேச்சை நம்பியோர்க்கு, பாவம் ஏதும் உண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக