திங்கள், செப்டம்பர் 10, 2018

குறள் எண்: 1135 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1135}

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

விழியப்பன் விளக்கம்: என்னில் பாதியாய் தொடர்ந்த, குறுவளையல்கள் அணிந்த என்னவளே; பனைமட்டைக் குதிரை ஏறும் நிலையுடன், மாலையில் அனுபவிக்கும் துயரையும் அளித்தாள்!
(அது போல்...)
எம்மின் பிரதிநிதிகளாக வந்த, சிறுபதவிகள் வகித்த அரசியலாரே; பணவீக்க விகிதம் உயரும் நிலையுடன், கொடுங்கோலில் வாழும் சூழலையும் அளித்தனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக