சனி, செப்டம்பர் 15, 2018

குறள் எண்: 1140 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1140}

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமத்தை, உணரும் அறிவற்றோர்; நானடைந்த துன்பத்தை தாமடைய வழியில்லை என்பது போல், இகழ்ந்து சிரிப்பர்!
(அது போல்...)
துணையிறப்பில் விளையும் தனிமையை, புரியும் இயல்பற்றோர்; அவரின் நிலையை தாமடைய வாய்ப்பில்லை என்பது போல், ஆதாயம் தேடுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக