வெள்ளி, செப்டம்பர் 07, 2018

குறள் எண்: 1132 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1132}

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவால் விளையும் காம வலியை, தாங்கமுடியாத உடம்பும் உயிரும்; நாணத்தை விலக்கி வைத்துவிட்டு, காமமுற்றார் போல பனைமட்டைக் குதிரையில் ஏறும்!
(அது போல்...)
பொருள்தேடலில் நிகழும் வெளிநாட்டு வாழ்வை, தொடரமுடியாத எண்ணமும் செயலும்; இயல்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பித்துப்பிடித்தார் போல கற்பனை உலகில் உலவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக