வியாழன், செப்டம்பர் 06, 2018

குறள் எண்: 1131 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1131}

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி

விழியப்பன் விளக்கம்: காதல் பெருகியதால், காமம் மிகுந்து வருந்துவோர்க்கு; பனை மட்டையில் செய்த குதிரையில் ஏறுவதை (மடல் ஏறுதல்) தவிர, அதிக பாதுகாப்பான வலிமை வேறில்லை!
(அது போல்...)
ஊழல் பெருகியதால், வாழ்வு இழந்து தவிப்போர்க்கு; மக்கள் ஆட்சியில் நிகழும் அரசியல் மாற்றம் தவிர, சிறந்த வாழ்வியல் காரணி வேறில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக