செவ்வாய், செப்டம்பர் 11, 2018

குறள் எண்: 1136 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1136}

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்

விழியப்பன் விளக்கம்: என்னவளைப் பிரிந்திருக்கும், என் கண்கள் உறக்கம் இன்றி தவிப்பதால்; பனைமட்டைக் குதிரை ஏறுவதை, உறுதியாய் நள்ளிரவிலும் நினைக்கிறேன்!
(அது போல்...)
குடும்பத்தைப் பிரிந்திருக்கும், என் சிந்தனைகள் இயல்பை மீறி இருப்பதால்; விமானத்தில் அமர்ந்து பயணிப்பதை, உண்மையெனக் கனவிலும் தொடர்கிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக