புதன், செப்டம்பர் 19, 2018

குறள் எண்: 1144 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1144}

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனைந்து பேசுவதால், காமம் சார்ந்த காதல் வளர்கிறது! அப்படி பேசுதல் இல்லையென்றால், அடிப்படையை இழந்து காதல் சிதைந்திருக்கும்! 
(அது போல்...)
உறவினர் உரிமையாய் ஊடல் கொள்வதால், உறவு சார்ந்த குடும்பம் வளர்கிறது! அத்தகைய ஊடல் இல்லையெனில், அன்பை இழந்து குடும்பம் அழிந்திருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக