சனி, செப்டம்பர் 22, 2018

குறள் எண்: 1147 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1147}

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்

விழியப்பன் விளக்கம்: ஊரார் பொய்யாய் புனையும் பேச்சு உரமாகவும், தாயின் அன்பில் விளையும் கடுஞ்சொல் நீராகவும் அமைந்து; காதலுடன் சேர்ந்த காம நோய், செழித்து வளரும்!
(அது போல்...)
மக்கள் கோபமாய் இடித்து உரைப்பது உடலாகவும், தலைவனின் அறத்தில் விளையும் வழிகாட்டல் உயிராகவும் அமைந்து; நேர்மையுடன் சேர்ந்த மக்கள் ஆட்சி, உயிர்த்து பிறக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக