திங்கள், செப்டம்பர் 24, 2018

குறள் எண்: 1149 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1149}

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை

விழியப்பன் விளக்கம்: "பொய்யாய் புனைந்து பேசுவதற்கு, வெட்கி விலகுவதா? அஞ்சாமை பழகு!" என பழக்கிய காதாலர்; எனைப் பிரிந்த நிலையில், பலருக்கும் வெட்கப்பட வைத்துவிட்டார்!
(அது போல்...)
“வஞ்சகமாய் வீழ்த்த நினைப்போர்க்கு, அஞ்சி தோற்பதா? வைராக்கியம் பழகு” என போதித்த குருவானவர்; உடலைப் பிரிந்த நிலையில், பலவற்றுக்கும் அச்சப்பட வைத்துவிட்டார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக