புதன், செப்டம்பர் 12, 2018

குறள் எண்: 1137 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1137}

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்

விழியப்பன் விளக்கம்: காதற்பிரிவில் விளையும் காமம், கடலளவு துன்பமளிப்பினும்; பனைமட்டைக் குதிரை ஏறிடாத, பெண்ணின் பேருறுதிக்கு நிகரானது ஏதுமில்லை!
(அது போல்...)
வெளிநாட்டில் வாழும் தனிமை, மலையளவு ஆட்டுவிப்பினும்; அறமற்றப் பாதையில் செல்லாத, ஆணின் மனக்கற்புக்கு இணையானது ஒன்றுமில்லை!

2 கருத்துகள்:

  1. இது வரையிலான வெளிநாட்டு வாழ்க்கை யில தடம் மாறியது கிடையாது ...இனியும்

    பதிலளிநீக்கு