வெள்ளி, செப்டம்பர் 21, 2018

குறள் எண்: 1146 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1146}

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று

விழியப்பன் விளக்கம்: நான் என் காதலரைக் கண்டது என்னவோ ஒருநாளே! ஆயினும், பொய்யாய் புனைந்து பேசுவது என்னவோ; நிலவைப் பாம்பு விழுங்கியதற்கு இணையாக இருக்கிறதே?!
(அது போல்...)
தான் தன் தலைவனைக் கண்டது என்னவோ தொலைவிருந்தே! ஆயினும், மிகையாய் அதிகாரம் செய்வது என்னவோ; யானையை எலி கொன்றதற்கு இணையாக இருக்கிறதே?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக