வியாழன், செப்டம்பர் 13, 2018

குறள் எண்: 1138 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 114 - நாணுத்துறவு உரைத்தல்; குறள் எண்: 1138}

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்

விழியப்பன் விளக்கம்: "மன நிறைவு இல்லாதவர்/மிகவும் இரக்கத்துக்கு உரியவர்" என்றெல்லாம் உணராமல்; மறைந்து இருப்பதைத் தவறி, எல்லோர் முன்பும் காமம் வெளிப்படும்!
(அது போல்...)
"வாழ்கை முழுமை இல்லாதவர்/சமுதாய ஒடுக்கத்திற்கு உள்ளானவர்" என்றெல்லாம் ஆராயாமல்; அவர்களை ஆதரிப்பதை விடுத்து, எல்லோர் வாழ்விலும் ஊழல் துன்புறுத்தும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக