வியாழன், செப்டம்பர் 20, 2018

குறள் எண்: 1145 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 3 - காமத்துப்பால்; இயல்: 12 - களவியல்; அதிகாரம்: 115 - அலர் அறிவுறுத்தல்; குறள் எண்: 1145}

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது

விழியப்பன் விளக்கம்: கள்ளுண்ணும் போதெல்லாம், கள்ளுண்பது சுவையளிப்பது போல்; பொய்யாய் புனைந்து பேசும் போதெல்லாம், காமம் சேர் காதலும் இனிமையளிக்கும்!
(அது போல்...)
அன்புறும் போதெல்லாம், அன்படைவது தெளிவளிப்பது போல்; மிகையாய் புகழ்ந்து பேசும் போதெல்லாம்; உறவு சேர் குடும்பமும் மகிழ்வளிக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக