வியாழன், மார்ச் 31, 2016

குறள் எண்: 0242 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்:  025 - அருளுடைமைகுறள் எண்: 0242}

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

விழியப்பன் விளக்கம்: நல்ல நெறிகளைப் பழகி, அருளைக் கொண்டிடல் வேண்டும்; பல்வேறு சமயநெறிகளை ஆராய்ந்தாலும், அருளே உன்னதமென புரியும்.
(அது போல்...)
சரியான வாழ்வியலை உணர்ந்து, உறவைப் பேணுதல் வேண்டும்; பல்வகை வாழ்வியலை ஆய்ந்தாலும், உறவே பலமென தெரியும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக