புதன், நவம்பர் 02, 2016

குறள் எண்: 0458 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0458}

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: மிகுந்த மனவலிமையை உடையவர் ஆயினும், சான்றோர்களுக்கு; அவர்கள் சார்ந்த இனத்தின் வலிமை, மேலும் பாதுகாப்பை அளித்திடும்.
(அது போல்...)
உயரிய சுயவொழுக்கம் பேணுபவர் எனினும், ஆட்சியாளர்களுக்கு; அவர்கள் ஆளும் மக்களின் சுயவொழுக்கம், கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக