செவ்வாய், நவம்பர் 08, 2016

குறள் எண்: 0464 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0464}

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்

விழியப்பன் விளக்கம்: இகழ்ச்சியெனும் குற்றவுணர்விற்கு அஞ்சுவோர்; விளைவைப் பற்றியத் தெளிவில்லாத, செயல்களைத் துவங்க மாட்டார்கள்.
(அது போல்...)
தானெனும் கர்வத்தை வெறுப்போர்; விமர்சிப்போரின் நோக்கத்தை அறியாமல், விமர்சனங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக