செவ்வாய், நவம்பர் 01, 2016

குறள் எண்: 0457 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0457}

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்

விழியப்பன் விளக்கம்: மனதின் வலிமை, உலக உயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்; அதுபோல் ஒரு இனத்தின் வலிமை, எல்லா வகையான புகழுக்கும் வித்திடும்.
(அது போல்...)
விவசாயத்தின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார திடத்திற்கு வித்திடும்; அதுபோல் ஒரு கிராமத்தின் வளர்ச்சி, வல்லரசுக்கான அனைத்து காரணிகளையும் வலுப்படுத்தும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக