வியாழன், நவம்பர் 24, 2016

குறள் எண்: 0480 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0480}

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

விழியப்பன் விளக்கம்: தன்னுடையக் கையிருப்பைக் கணக்கிடாமல், பிறர்க்கு உதவிக் கொண்டே இருந்தால்; ஒருவரின் செல்வத்தின் அளவு, விரைவில் அழியும்.
(அது போல்...)
தன்னுடைய குறையைக் களையாமல், பிறரை விமர்சித்துக் கொண்டே இருந்தால்; ஒருவரின் சுயத்தின் தரம், வேகமாய் குறையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக