வெள்ளி, நவம்பர் 11, 2016

குறள் எண்: 0467 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0467}

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

விழியப்பன் விளக்கம்: எவ்வொரு செயலாயினும், முற்றிலும் ஆராய்ந்த பின்னர் துவங்கவேண்டும்; துவங்கியபின் ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றமாகும்!
(அது போல்...)
எந்தவொரு உறவாயினும், பரஸ்பரம் அன்பைப் பரிமாறியபின் இணையவேண்டும்; இணைந்தபின் பரிமாறிக் கொள்ளலாம் என்பது தவறாகும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக