புதன், நவம்பர் 16, 2016

குறள் எண்: 0472 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0472}

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

விழியப்பன் விளக்கம்: தம் வலிமையின் இயல்பை அறிந்து, அறிந்த வண்ணம் வைராக்கியமுடன் நிலைத்து செயல்படுவோர்க்கு; இயலாதது என்று எதுவுமில்லை.
(அது போல்...)
சுய ஒழுக்கத்தின் மாண்பை உணர்ந்து, உணர்ந்த வண்ணம் உண்மையுடன் தொடர்ந்து வாழ்வோர்க்கு; வேதனை என்று ஏதுமில்லை.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக