புதன், நவம்பர் 23, 2016

குறள் எண்: 0479 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0479}

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

விழியப்பன் விளக்கம்: வருமானத்தின் அளவை உணர்ந்து, வாழாதவரின் வாழ்க்கை; வளமாய் இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, பின்னர் உருவழிந்து கெட்டழியும்.
(அது போல்...)
உறவுகளின் உன்னதத்தை மதித்து, பழகாதவரின் நிலைமை; அதிகாரமாய் இருப்பது போன்ற நம்பிக்கையைக் கொடுத்து, பின்னர் சுயமிழந்து முடிவடையும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக