சனி, நவம்பர் 26, 2016

குறள் எண்: 0482 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0482}

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு

விழியப்பன் விளக்கம்: காலத்தை உணர்ந்து, காலத்தோடு இணைந்து செயல்படுவதே; செயலால் கிடைக்கும் செல்வத்தை, இழக்காமல் கட்டிக்காக்கும் கயிறு ஆகும்.
(அது போல்...)
உறவைப் புரிந்து, உறவோடுப் பிணைந்து பயணப்படுவதே; உறவால் தொடரும் சந்ததியை, துண்டிக்காமல் இட்டுச்செல்லும் சங்கிலி ஆகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக