செவ்வாய், நவம்பர் 29, 2016

குறள் எண்: 0485 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0485}

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

விழியப்பன் விளக்கம்: உலகை ஆட்கொள்ள விரும்புவோர், அதுபற்றிய கவலை ஏதுமின்றி; உரிய காலத்தை எதிர்நோக்கி, பொறுமையுடன் காத்திருப்பர்.
(அது போல்...)
உணர்வை அடக்கியாள எண்ணுவோர், அதுகுறித்த பயம் இன்றி; தக்க பயிற்சியை மேற்கொண்டு, வைராக்கியமுடன் செயல்படுவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக