வியாழன், நவம்பர் 03, 2016

குறள் எண்: 0459 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 046 - சிற்றினஞ்சேராமை; குறள் எண்: 0459}

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து

விழியப்பன் விளக்கம்: மனதின் வலிமையால், ஒருவரின் பிறவிப்பயன் பெருகும்; அப்பயனும், அவர் சார்ந்த இனத்தின் மிகுந்த வலிமையால் பாதுகாக்கப்படும்.
(அது போல்...)
தொழிலாளியின் உழைப்பால், நிறுவனத்தின் வளர்ச்சி விரிவடையும்; அவ்வளர்ச்சியும், அவர் சார்ந்த சங்கத்தின் அதீத உழைப்பால் நிலைத்திருக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக