வெள்ளி, நவம்பர் 18, 2016

குறள் எண்: 0474 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0474}

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

விழியப்பன் விளக்கம்: பிறருடன் இணக்கமாய் உறவாடாமல், தன் வலிமையின் அளவை அறியாமல்; தன்னைத் தானே வியந்து பேசுவோர், வேகமாய் அழிவர்.
(அது போல்...)
அணியினரிடம் முழுமையாய் விவாதிக்காமல், தன் தலைமையின் தரத்தை உணராமல்; தானெனும் கர்வமுடன் செயல்படும் அணித்தலைவர்கள், விரைவில் கெடுவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக