புதன், நவம்பர் 09, 2016

குறள் எண்: 0465 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0465}

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு

விழியப்பன் விளக்கம்: முறையானத் திட்டங்களை வகுக்காமல், போரை எதிர்கொள்ளுதல்; பாத்தியில் விதையை விதைப்பது போல், பகைவரை வலிமைப்படுத்தும் வழியாகும்.
(அது போல்...)
நிலையான வருமானத்தை வரையறுக்காமல், கடனை வாங்குதல்; நெருப்பில் நெய்யை வார்ப்பது போல், துன்பத்தைப் பெருக்கும் செயலாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக