வியாழன், நவம்பர் 17, 2016

குறள் எண்: 0473 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0473}

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்

விழியப்பன் விளக்கம்: தம் வலிமையை உணராமல், உணர்ச்சி உந்துதலில் செயல்களைத் துவங்கி;  இடையில் விட்டொழிந்தோர் பலருண்டு.
(அது போல்...)
தம் வருமானத்தைத் திட்டமிடாமல், அவசியச் சூழலில் கடன்களைப் பெற்று; இளமையில் வாழ்விழந்தோர் பலருண்டு.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக