ஞாயிறு, நவம்பர் 27, 2016

குறள் எண்: 0483 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 049 - காலமறிதல்; குறள் எண்: 0483}

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

விழியப்பன் விளக்கம்: செய்யும் செயலை, தேவையான ஏற்பாடுகளுடன் காலமறிந்து செய்யும் திறனுடையோர்க்கு; செயற்கரிய செயலென்று, ஏதும் இருக்கின்றதோ?
(அது போல்...)
ஈட்டும் பொருளை, நிலையான திட்டங்களுடன் அளவறிந்து சேமிக்கும் வல்லவர்களுக்கு; சமாளிக்க முடியாத, சூழலேதும் வந்திடுமோ?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக