திங்கள், நவம்பர் 07, 2016

குறள் எண்: 0463 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0463}

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்

விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோர், வருங்கால வரவை கணக்கிட்டு; நிகழ்காலக் கையிருப்பை இழக்கவைக்கும் செயல்களைச் செய்யமாட்டார்கள்.
(அது போல்...)
மரணத்தை உணர்ந்தோர், பிற்கால வாழ்வை நினைத்து; தற்கால அனுபவத்தை இழக்கும் வாழ்வை வாழமாட்டார்கள்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக