திங்கள், நவம்பர் 21, 2016

குறள் எண்: 0477 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0477}

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி

விழியப்பன் விளக்கம்: நம் பொருளீட்டும் திறத்தை உணர்ந்து, பிறர்க்குக் கொடுத்தல் வேண்டும்; அதுவே பொருளைப் பாதுகாத்து, கொடையளிக்கும் நெறியாகும்.
(அது போல்...)
நம் புரிதலின் ஆழத்தை ஆராய்ந்து, பிறர்க்குக் கற்பித்தல் வேண்டும்; அதுவே புரிதலை விரிவாக்கி, கற்பிக்கும் வழியாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக