திங்கள், நவம்பர் 14, 2016

குறள் எண்: 0470 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0470}

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு

விழியப்பன் விளக்கம்: தம் இயல்பு அல்லாதவற்றை, மக்கள் ஏற்கமாட்டர்கள் என்பதால்; பிறர் இகழாத வகையில், நம் செயல்களை உணர்ந்து வகுக்கவேண்டும்.
(அது போல்...)
தமக்கு ஈடுபாடு இல்லாதவற்றை, மாணவர்கள் கற்கமாட்டார்கள் என்பதால்; அவர்கள் இன்னலடையாத முறையில், கல்வித் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக