சனி, நவம்பர் 05, 2016

குறள் எண்: 0461 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0461}

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

விழியப்பன் விளக்கம்: ஓர் செயலால் விளையும் நன்மையை, அச்செயலின் அழிவு மற்றும் ஆக்கம் இரண்டின் அடிப்படையிலும் கணக்கிட்டு; அதன் பின் செயல்களை வகுக்கவேண்டும்.
(அது போல்...)
ஓர் சிந்தனையால் உருப்பெறும் படைப்பை, அச்சிந்தனையின் குறை மற்றும் நிறை இரண்டின் அடிப்படையிலும் மதிப்பிட்டு; அதன் பின் சிந்தனைகளை வலுப்படுத்தவேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக