ஞாயிறு, நவம்பர் 20, 2016

குறள் எண்: 0476 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0476}

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்

விழியப்பன் விளக்கம்: மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், மனித வலிமையின் வரையறையை உணராமல்; மேலும் ஏறிட முயன்றால், உயிரை மாய்ப்பதற்கு வழிவகுக்கும்.
(அது போல்...)
மக்களின் உரிமைகளைத் தகர்ப்போர், உரிமை மீறலின் விளைவை அறியாமல்; மென்மேலும் தகர்க்க முனைந்தால், சமுதாயப் புரட்சிக்கு வித்திடும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக