ஞாயிறு, நவம்பர் 13, 2016

குறள் எண்: 0469 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 047 - தெரிந்து செயல்வகை; குறள் எண்: 0469}

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை

விழியப்பன் விளக்கம்: அவரவரின் இயல்பானப் பண்பை உணர்ந்து, செயல்களைச் செய்யத் தவறுவது; நன்மைப் பயக்கும் செயல்களிலும், தவறை இழைக்கும்.
(அது போல்...)
பிறரின் சுயமான உரிமையை அறிந்து, உறவுகளை வழிநடத்தத் தவறுவது; பெரியோர் நிர்ணயிக்கும் உறவுகளிலும், விரிசலை உருவாக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக