ஞாயிறு, அக்டோபர் 04, 2015

குறள் எண்: 0063 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0063}

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் 
தம்தம் வினையான் வரும்

விழியப்பன் விளக்கம்: ஒருவரின் செல்வம் என்பது அவரது குழந்தைகளே; அத்தகைய செல்வம், அவரவரின் வினைப்பயனால் நிர்ணயிக்கப்படும்.
(அது போல்...)
ஒருவரின் ஒழுக்கம் என்பது அவரது செயல்பாடுகளே; அத்தகைய ஒழுக்கம், அவரவரின் சிந்தனையால் பண்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக