வியாழன், அக்டோபர் 29, 2015

குறள் எண்: 0088 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0088}

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி 
வேள்வி தலைப்படா தார்

விழியப்பன் விளக்கம்: விருந்தினர்களைப் பேணும் வேள்வியைச் செய்யாதவர்கள்; வருந்தி சேர்த்த செல்வத்தின் மீதான பற்றை, இழந்தோம் என்பர்.
(அது போல்...)
மனிதத்தைப் பேணும் செயல்களைச் செய்யாதவர்கள்; விரும்பி வாழ்ந்த வாழ்க்கையின் மீதான பிணைப்பை, இழந்தோம் என்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக