வெள்ளி, அக்டோபர் 09, 2015

குறள் எண்: 0068 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0068}

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

விழியப்பன் விளக்கம்: நம் பிள்ளைகள் அறிவுடையவர்களாய் இருப்பது, நம்மைவிட; அகண்ட மண்ணுலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும், அதிக மகிழ்வளிக்கும்.
(அது போல்...)
தன் தொண்டர்கள் நற்தலைவர்களாய் வளர்வது, தன்னைவிட; பரந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும், அதிக நன்மையளிக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக