வெள்ளி, அக்டோபர் 23, 2015

குறள் எண்: 0082 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0082}

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

விழியப்பன் விளக்கம்: விருந்தினர்கள் வெளியே காத்திருக்க; சாகா-மருந்தே ஆயினும் - தனித்து உண்பது, விரும்பத்தக்க முறையன்று.
(அது போல்...)
மக்கள் குடிசையும் இல்லாதிருக்க; வைர-மாளிகையே எனினும் - தனியே அனுபவிப்பது, ஆட்சியாளரின் மாண்பன்று.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக