புதன், அக்டோபர் 07, 2015

குறள் எண்: 0066 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0066}

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
மழலைச்சொல் கேளா தவர்

விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளின் மழலைப் பேச்சைக் கேளாதவர்களே; குழல் மற்றும் யாழ் இவைகளிலிருந்து வரும் ஒலியை - இனிதென்பர்.
(அது போல்...)
அறவழியில் பயணிக்கும் வைராக்கியம் இல்லாதவர்களே; குற்றம் மற்றும் முறையற்றச் செயல்களின் மூலம் பயணிப்பதை - சரியென்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக