சனி, அக்டோபர் 10, 2015

குறள் எண்: 0069 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0069}

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

விழியப்பன் விளக்கம்: தன்பிள்ளைகளைச் சான்றோர் எனப், போற்றப்படுவதைக் கேட்கும் தாய்; அவர்களை ஈன்றெடுத்தப் பொழுதைவிட, பேர்மகிழ்ச்சி அடைவாள்.
(அது போல்...)
தன்பிள்ளைகள், முதன்முதலாய் அப்பா என்றழைக்கக் கேட்கும் தந்தை; அவர்கள் கருவடைந்த நேரத்தைவிட, பன்மடங்கு ஆனந்தமடைவான்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக