திங்கள், அக்டோபர் 19, 2015

குறள் எண்: 0078 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0078}

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

விழியப்பன் விளக்கம்: உளத்தில் அன்பில்லாதவரின் வாழ்கை; ஈரமற்ற வன்மையான நிலத்தில், உலர்ந்துபோன மரம் துளிர்ப்பதைப் போன்றது.
(அது போல்...)
உருவாக்கியவரே பின்பற்றாத கொள்கைகள்; இறந்து காய்ந்த மீனுக்கு, நீரூற்றி உயிர்ப்பிக்க நினைப்பது போன்றதாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக