செவ்வாய், அக்டோபர் 06, 2015

குறள் எண்: 0065 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0065}

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் 
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

விழியப்பன் விளக்கம்: பிள்ளைகளைத் தழுவுதல், உடலுக்கு இன்பம்; மற்றும், அவர்கள் பேசுவதைக் கேட்பது செவிக்கு இன்பமாகும்.
(அது போல்...)
உடலைப் பேணுதல், குடும்பத்திற்கு வளம்; மற்றும், உள்ளிருக்கும் ஆன்மாவைப் பேணுதல் சமுதாயத்திற்கு வளமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக