செவ்வாய், அக்டோபர் 20, 2015

குறள் எண்: 0079 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0079}

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

விழியப்பன் விளக்கம்: உடம்பினுள் இருக்கவேண்டிய அன்பெனும் அக-உறுப்பு இல்லாதவர்களுக்கு; வெளியில் இருக்கும் புற-உறுப்புகள், என்ன பயனை விளைவிக்கும்?
(அது போல்...)
குடும்பத்தில் இருக்கவேண்டிய ஒழுக்கமெனும் அறநெறி இல்லாதவர்களுக்கு; வெளியே செய்யும் சாதனைகள், என்ன புகழைக் கொடுக்கும்?
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக