வியாழன், அக்டோபர் 08, 2015

குறள் எண்: 0067 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0067}

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து 
முந்தி யிருப்பச் செயல்

விழியப்பன் விளக்கம்: அவையின் நாயகர்களாக இருக்கச்செய்தலே; ஓர் தந்தை தன் பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய நன்மையாகும்.
(அது போல்...)
தலைசிறந்தக் குடிமக்களாக இருக்கவைப்பதே; ஓர் தலைவன் தன் நாட்டுமக்களுக்குச் செய்யும் கடமையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக