திங்கள், அக்டோபர் 19, 2015

தும்மலில் ஓர் ஒழுக்கம்...



       மேலுள்ள வாசகத்தை நண்பனொருவன் வாட்ஸ்-ஆப்பில் பகிர்ந்தான். அதனைப்பாராட்டி விட்டு, நான் எனக்குள்ள புரிதலை கீழ்வருமாறு விளக்கினேன்: ஆம்! ஒருவர் தும்மும்போது அவரின் முகத்தை "கைகளால் மறைத்து" தும்மும் வழக்கத்தை, நான் முதன்முதலில் போர்ச்சுக்கல் நாட்டில் தான் பார்த்தேன். அந்த வழக்கம் எனக்கு பிடித்திருந்தது; ஏனெனில், நானோ அல்லது மற்றவரோ தும்மும்போது - தெறிக்கும் எச்சிலால் - முகம்-சுழிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே, மற்றவருக்கு இடையூறாக இல்லாத வண்ணம் "வாய்/மூக்கு" போன்ற உறுப்புகளை மறைத்து தும்மும் வழக்கம் எனக்கு, ஓர் ஒழுக்காமாகத் தெரிந்தது. அன்று முதல் இந்தப் பழக்கத்தை நானும் தொடர்ந்து வருகிறேன் - இன்றுவரைக் கூட அப்படியே செய்கிறேன்.  

           அது போல், நம் தும்மலால் எழுந்த சத்தம் அல்லது நம் மறைப்பையும் மீறி அடுத்தவர்கள் மேல் எச்சில் ஏதேனும் தெறித்திருக்குமோ என்ற ஐயம் - இவை போன்றவற்றின் அடிப்படையில்; போர்ச்சுக்கல் நாட்டு மக்கள் - தம் அருகில் இருப்போரிடம் "மன்னிக்க!" என்று கோருவர்.  அதுவும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும், நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன். இதுதான், நான் அங்கே பகிர்ந்த என் புரிதல். எனவே, நான் தும்மும்போது சம்பந்தப்பட்ட உறுப்புகளை மூடிக்கொண்டு; தும்மிவிட்டு தன்னிச்சையாக "Sorry" என்று சொல்வதுண்டு. வேண்டுமானால், நான் அடுத்தமுறை தும்மும்போது - நீங்கள் அருகில் இருந்தால்; இதைச் சரிசெய்து பாருங்களேன்.  நல்ல விசயங்கள் எங்கிருந்து வந்தாலும்; ஏற்பது என் வழக்கம்! அப்போ நீங்க...?!

உங்களுக்கும் இது பிடித்திருந்தால்; இக்கணம் முதல், கடைபிடியுங்களேன்!!!

2 கருத்துகள்: