ஞாயிறு, அக்டோபர் 11, 2015

குறள் எண்: 0070 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 007 - புதல்வரைப் பெறுதல்குறள் எண்: 0070}

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை 
என்னோற்றான் கொல்எனும் சொல்

விழியப்பன் விளக்கம்: "இவர்களின் தந்தை எத்தகைய நோன்பு நோற்றிருப்பான்?" என்று பிறரை வியக்கவைப்பதே; பிள்ளைகள், தந்தைக்கு செலுத்தும் நன்றிக்கடனாம்.
(அது போல்...)
"இவர்களின் ஆட்சியாளர் என்ன வரம் பெற்றிருப்பார்??" என்று பிறரைப் புகழவைப்பதே; குடிமக்கள், ஆள்பவருக்குக் கொடுக்கும் ஊக்கமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக