வெள்ளி, அக்டோபர் 16, 2015

குறள் எண்: 0075 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0075}

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

விழியப்பன் விளக்கம்: இவ்வுலகில், இன்பமாய் வாழ்பவர்களின் சிறப்பானது; அவர்களின் அன்புள்ளம் நிறைந்த வாழ்க்கையால் விளைந்த பயனாகும்.
(அது போல்...)
சமூகத்தில், மதிப்புடன் வாழ்பவர்களின் புகழானது; அவர்களின் அறநெறித் தவறாத பயணத்துக்குக் கிடைத்த வெகுமதியாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக