செவ்வாய், அக்டோபர் 27, 2015

குறள் எண்: 0086 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0086}

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத் தவர்க்கு

விழியப்பன் விளக்கம்: வந்த விருந்தினர்களைப் பேணி அனுப்பிவிட்டு, வரும் விருந்தினர்களுக்கு காத்திருப்பவன்; விண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல விருந்தினனாவான்.
(அது போல்...)
வந்த நோயைக் குணப்படுத்திவிட்டு, வரவிருக்கும் நோய்களைத் தடுக்க முனைபவன்; மண்ணுலகில் உள்ளோர்க்கு நல்ல முன்னோடியாவன்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக