ஞாயிறு, அக்டோபர் 25, 2015

குறள் எண்: 0084 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 009 - விருந்தோம்பல்குறள் எண்: 0084}

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்

விழியப்பன் விளக்கம்: முகம்-மலர்ந்து, சிறப்பாக விருந்தினரைப் பேணுவோரின் வீட்டில்; நெஞ்ச-அகம் மலர்ந்து, திருமகள் வாழ்வாள்.
(அது போல்...)
தேடல்-வளர்க்கும், சிறந்த சிந்தனைகளைப் பரப்புவோரின் படைப்புகளில்; படைப்பு-திறம் வளர்க்க, பிரம்மா அருள்புரிவார்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக