செவ்வாய், அக்டோபர் 13, 2015

குறள் எண்: 0072 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 008 - அன்புடைமைகுறள் எண்: 0072}

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

விழியப்பன் விளக்கம்: அன்பில்லாதோர், அனைத்தும் தமக்கே சொந்தமெனக் கருதுவர்;  அன்புடையோர் - தம் உடலும், பிறர்க்கு சொந்தமென நினைப்பர்.
(அது போல்...)
அமைதியற்றோர், பிறரின் மகிழ்ச்சியைக் கெடுக்க எண்ணுவர்; அமைதியானோர், தன் மகிழ்ச்சியை, எல்லோர்க்கும் கடத்திட முயல்வர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக